மகாமகம் திருவிழா: ஜெயலலிதா ஆலோசனை

சனி, 13 பிப்ரவரி 2016 (00:04 IST)
கும்பகோணத்தில் நடைபெற உள்ள மகாமகம் திருவிழாவை முன்னிட்டு, முதல்வர்  ஜெயலலிதா அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
 

 
கும்பகோணத்தில் இன்று முதல் 22 ஆம் தேதி வரை மகாமகம் திருவிழா நடைபெறுகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு, அஇதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் , முதல்வர் ஜெயலலிதா தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில்  நடைபெற்றது.
 
இந்த கூட்டத்தில் நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மற்றும் தலைமை செயலாளர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்னர். 

வெப்துனியாவைப் படிக்கவும்