தொடர்ந்து முனேற்றம், தொடர்ந்து முன்னேற்றம், இன்னும் சில தினங்களில் வீடு திரும்புவார், அவர் பூரண குணமடைந்து விட்டார், அவர் எப்போது வீடு திரும்புவார் என்பதை அவரே முடிவே செய்வார் என தொடர்ந்து சாதகமாகவே கூறிவந்தது அப்பல்லோ.
இந்நிலையில் நேற்று மாலை முதல்வருக்கு மாரடைப்பு ஏற்பட அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வரும் அப்பல்லோ மருத்துவமனை முதன் முறையாக தனது அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து கவலைக்கிடமாக இருக்கிறார் என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளது மிகவும் உன்னிப்பாக பார்க்கப்படுகிறது. முதல்வர் ஜெயலலிதா மீண்டு வந்து தமிழக மக்களுக்காக பணியாற்ற இறைவனை பிராத்திப்போம்.