மே 31-க்கு பிறகு என்ன? பொதுமுடக்க ஆலோசனையில் ஈபிஎஸ்!!

திங்கள், 25 மே 2020 (10:51 IST)
மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் பழனிசாமி நாளை காலை ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
நேற்று தமிழகத்தில் 765 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 16,227 ஆக உயர்ந்துள்ளது. 
 
மேலும் சென்னையில் மட்டும் 587 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதால் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10,576 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் வரும் 31 ஆம் தேதியுடன் பொதுமுடக்கம் நிரைவடைகிறது. 
 
எனவே, மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி நாளை காலை ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மே 31 ஆம் தேதியுடன் பொதுமுடக்கம் முடிவடைய உள்ள நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஆலோசனை செய்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்