மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு தலைமைச்செயலாளர் இறையன்பு கடிதம்!

வெள்ளி, 12 நவம்பர் 2021 (08:18 IST)
கன மழை காரணமாக மீட்பு பணிகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்
 
நரிக்குறவர், பழங்குடியினர், இதர விளிம்பு நிலை மக்கள் வசிக்கும் ஒவ்வொரு கிராமம், பகுதிகளை நேரடியாகக் கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அப்பகுதிகளுக்குத் தேவையான அனைத்து உட்கட்டமைப்புகளையும் , சம்பந்தப்பட்ட துறைகள் திட்டங்கள் வாரியாக அளிக்க பயன்களையும் கண்டறிந்து பட்டியலிட வேண்டும்
 
ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவையான, அரசின் சார்பாக மேற்கொள்ளக் கூடிய அனைத்து உதவிகளையும் முழுமையாகக் கண்டறிய வேண்டும்/ முழுமையான ( exhausthve ) தேவைகள் மதிப்பீடு பட்டியல் Needs Assessment List ) தயார் செய்யப்பட வேண்டும் 
 
இப்பணியினை மேற்கொள்ள ஒரு தொடர்பு அலுவலர் நியமனம் செய்யப்பட வேண்டும் என தலைமைச்செயலாளர் இறையன்பு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்