தமிழக முதல்வர் ஜெயலலிதா கிறிஸ்துமஸ் வாழ்த்து

வியாழன், 24 டிசம்பர் 2015 (21:35 IST)
கிறிஸ்தவ மக்கள் அனைவருக்கும் முதல்வர் ஜெயலலிதா கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில், கருணையின் வடிவமான இயேசுபிரான் அவதரித்த திருநாளை கிறிஸ்துமஸ் திருநாளாக கொண்டாடி மகிழும் கிறிஸ்தவ மக்கள் அனைவருக்கும், எனது இதயம் கனிந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
இயேசு பிரான் போதித்த அன்பு, எளிமை, கருணை போன்ற உயரிய குணங்களை மக்கள் அனைவரும் பின்பற்றி சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாக வாழ வேண்டும் என அந்த வாழ்த்து தெய்தியில் தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்