சென்னையின் புதிய கமிஷனரானார் டி.கே.ராஜேந்திரன் : சிறைத்துறைக்கு மாற்றப்பட்டார் ஜார்ஜ்

சனி, 10 அக்டோபர் 2015 (16:09 IST)
சென்னையின் புதிய கமிஷனராக டி.கே.ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை கமிஷனராக இருந்த ஜார்ஜ் சிறைத்துறைக்கு மாற்றப்பட்டார்.


 
 
பொதுவாக தேர்தல் நெருங்கும் நேரத்தில், மூன்று ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகள் அனைவரும் மாற்றம் செய்யப்பட வேண்டும். அதன் படி 2012 ஆம் ஆண்டிலிருந்து சென்னை கமிஷனராக பதவி வகிக்கும் ஜார்ஜ் இப்போது சிறைத்துறைக்கு மாற்றப்பட்டிருக்கிறார் என்று தெரிகிறது.
 
அதிகாரவர்கத்திலிருக்கும் சிலருக்கு ஆதரவாக செயல்பட்டார் என்று, ஜார்ஜ் பற்றி நிறைய புகார்கள் எழுந்ததாகவும், டி.கே. ராஜேந்திரன் தேர்தல் நேரத்தில் ஆளும் கட்சியின் உத்தரவுகளை நிறைவேற்றி தருவார் எனபதாலும் இந்த மாற்றம் நடந்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்திருக்கிறது.
 
சென்னையின் புதிய கமிஷனராக பதவியேற்றிருக்கும் டி.கே.ராஜேந்திரன் கூறிய போது “சென்னை மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வேன். சென்னை மாநகர கமிஷனர் பதவி மிகவும் சவாலனதாகும். முதல் அமைச்சர் எதிர்பார்க்கும் அளவுக்கு சிறப்பாக செயல்படுவேன். உண்மையுடன், கடமையுடனும் பணியாற்றுவேன். எல்லோருடைய ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறேன்” என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்