இதனை விசாரித்த நீதிமன்றம் ராம்குமாரை வீடியோ எடுக்க அனுமதி அளித்ததோடு ஒரு சில நிபந்தனைகளை விதித்தது. அதில் அதில், ராம்குமாரை வீடியோ, புகைப்படம் மற்றும் உடல் தொடர்பான அளவீடுகள் எடுக்க வேண்டும். காவல்துறையில் புகைப்பட பிரிவில் துணை ஆய்வாளர் தகுதிக்கு குறையாத நபர் வீடியோ உள்ளிட்டவைகளை எடுக்க வேண்டும்.
வீடியோ எடுத்த பிறகு, அதை எழுப்பூர் நீதிமன்றத்துக்கு அனுப்ப வேண்டும். வழக்கில் விசாரணை அதிகாரிக்கு தேவையான வசதியை புழல் சிறை-2 கண்காணிப்பாளர் செய்து தர வேண்டும். வீடியோ உள்ளிட்டவற்றை அடுத்தக்கட்ட ஆய்விற்காக தடயவியல் துறைக்கும் அனுப்ப வேண்டும் போன்ற நிபந்தனைகளை நீதிபதி பிறப்பித்துள்ளார்.