சென்னையில் இன்று வழக்கம்போல பேருந்துகள் இயங்கும்: தொமுச அறிவிப்பு

செவ்வாய், 29 மார்ச் 2022 (07:45 IST)
சென்னையில் இன்று வழக்கம் போல் பேருந்துகள் இயங்கும் என தொமுச அறிவிப்பு செய்துள்ளது. 
 
நாடு முழுவதும் மத்திய அரசை எதிர்த்து பாரத் பந்த் நடத்தப்பட்டு வரும் நிலையில் நேற்று சென்னையில் சுமார் 60% பேருந்துகள் இயங்கவில்லை
 
இதனால் பயணிகள் மின்சார ரயில்கள் மெட்ரோ ரயில் மற்றும் ஆட்டோ ஷேர் ஆட்டோக்களில் பயணம் செய்தனர் 
 
இந்த நிலையில் இன்று 60% பேருந்துகள் இயங்கும் என தொமுச ஏற்கனவே அறிவித்த நிலையில் தற்போது சென்னையில் இன்று வழக்கம் போல் பேருந்துகள் இயங்கும் என தொமுச அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்