என்னென்ன சான்றிதழ் கொண்டு வர வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவற்றை மே 30, 31ஆம் தேதி சென்னையில் நடைபெறும் சான்றிதழ் சரி பார்க்கும் நிகழ்வுக்கு வர வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கணக்கு பாடத்துக்கு சென்னை சேத்துப்பட்டில் உள்ள கிறிஸ்தவ மேல்நிலைப் பள்ளியில் மே 30, 31 ஆகிய தேதிகளிலும், தாவரவியல் பாடத்துக்கு விருகம்பாக்கம் ஜெயகோபால் கரோடியா பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், விலங்கியல் பாடத்துக்கு சென்னை அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், புவியியல் படத்திற்கு சென்னை சேத்துப்பட்டில் உள்ள கிறிஸ்தவ மேல்நிலைப் பள்ளியில் 30-ஆம் தேதியிலும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.