காவல் நிலையம் முன்பு பெண் கையில் வைத்திருந்த செல்போன்,மற்றும் பணத்தை பறித்து சென்ற மூன்று மர்ம நபர்கள்!

J.Durai

சனி, 8 ஜூன் 2024 (10:29 IST)
போடி அருகே உள்ள நாகலாபுரம் கண்மணி என்ற பெண், உடல்நிலை சரியில்லாத தனது பாட்டியை பார்க்க வந்தார்.
 
அப்போது போடி காவல் நிலையம் முன்பு நடந்து சென்ற போது, இரண்டு சக்கர வாகனத்தில் வந்த மூன்று மர்ம நபர்கள், பெண்ணின் கையில் வைத்திருந்த செல்போன் மற்றும்  பணத்தைப் பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் சென்று விட்டனர்.
 
இதுகுறித்து போடி காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்