நடிகை ராதிகாவின் மகள் திருமணத்தில் குடித்துவிட்டு கும்மாளம் அடித்த பிரபலங்கள்!

ஞாயிறு, 28 ஆகஸ்ட் 2016 (09:53 IST)
நடிகை ரதிகாவின் இரண்டாவது கணவர் ரிச்சர்ட் ஹார்டிக்கு பிறந்தவர் ரயானெ ராதிகா.


 


இவரை கரம் பிடிப்பவர், பெங்களூரு கிரிக்கெட் வீரர் அபிமன்யூ. சென்னையின் பிரபல ஹோட்டலான தாஜில், இவர்களின் திருமண விருந்து நடைப்பெற்றது. அதில், பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர்.


 


அவர்களுக்கு மது விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிரபலங்கள் பலர் மது அருந்திவிட்டு ஒருவருக்கொருவர் கட்டிப் பிடித்து செல்பி எடுத்தனர்.



அந்த விழாவில் கலந்து கொண்ட, தனுஷ், அவரது மனைவி ஐஸ்வர்யா தனுஷ், ஜெயம் ரவி, சுந்தர் சி. குஷ்பு சுந்தர், ரம்யா கிருஷ்ணன், மதுபாலா, உள்ளிட்ட பலரும் போதையில் மிதந்ததாக கூறப்படுகிறது.


 


இந்த விருந்து முடிந்து, குடி போதையுயில், வீடு திரும்பும் போதுதான் விபத்து ஏற்படுத்தி, காவல்துறையினரிடம் அருண் விஜய் பிடிபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


 


மேலும், விருந்து முடிந்து போதையில் வாகனம் ஓட்டி வந்த பல பிரபலங்களை கண்டிக்காமல், அவர்களுடன் காவல்துறையினர் சிலர் செல்பியும் எடுத்துக் கொண்டதாக புகார் எழுந்துள்ளது.





]

வெப்துனியாவைப் படிக்கவும்