சென்னை வடபழனி, கோடம்பாக்கம், சாலிகிராமம் ஆகிய இடங்களில் நடைபெற்ற சோதனையில் 3 தரகர்களும் கைது செய்யப்பட்டனர். மேலும், இவர்களிடமிருந்து வெளிமாநிலத்தைச் சேர்ந்த 9 இளம்பெண்களும் மீட்கப்பட்டனர்.
இதேபோல, சென்னை புறநகர் பகுதியான குமணன் சாவடியில் தரகர் ஒருவரையும், அவரிடமிருந்த 2 இளம்பெண்களையும் காவல் துறையினர் மீட்டனர். மொத்தத்தில், 5 விபசார தரகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட 11 இளம்பெண்களும் அரசு மறுவாழ்வு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.