மு.க.முத்துவை கண்டு கொள்ளாத கருணாநிதி குடும்பம்

திங்கள், 12 அக்டோபர் 2015 (22:32 IST)
திமுக தலைவர் கருணாநிதியிந் மூத்த மகன் மு.க.முத்து உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வரும் நிலையில், அவரை கருணாநிதி குடும்பத்தினர் கைவிட்டதாக கூறப்படுகிறது.
 
திமுக கலைஞரின் மூத்த மகனும் நடிகருமான மு.க.முத்து திருவாரூரில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக  உடல்லக் குறைவால் அவதிப்பட்டு வந்தார்.இதனால், தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்டாததால்,  சென்னை அப்பல்லோ மருத்துவ மனையில் அட்மிட் செய்யப்பட்டார்.  பின்பு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
 
மு.க.முத்து உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வரும் நிலையில், திமுக தலைவர் கருணாநிதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் யாரும் மு.க.முத்துவுக்கு ஆறுதல் கூறவோ அல்லது நிதி உதவி போன்ற எந்த உதவியும் செய்யவில்லை என்றும், அவரை கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகின்றது. இதன் காரணமாக, மு.க.முத்து மிகுந்த வேதனையில் உள்ளதாக கூறப்படுகிறது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்