புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலகம் மீது வெடிகுண்டு வீச்சு

வியாழன், 12 மார்ச் 2015 (10:20 IST)
புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலகத்தின் மீது மர்ம நபர்கள் டிஃபன் பாக்ஸ் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
 
சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ளது புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலகம். இந்த அலுவலகம் மீது இன்று (12.03.2015) அதிகாலை மர்ம நபர்கள் டிஃபன் பாக்ஸ் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
 
இந்தர் தாக்குதல் இன்று அதிகாலை 3.15 மணிக்கு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இததைத் தொடர்ந்து  அங்கு விரைந்து வந்த கிண்டி காவல்துறையினர் வெடிகுண்டு வீசப்பட்டது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்