கோவைக்கு வந்த ராகுல் காந்தியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் 15 பெண்கள் உள்ளிட்ட 91 பேர் இந்த கருப்புக்கொடி போராட்டத்தில் பங்கேற்றனர். காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கோஷமிட்ட 91 பேரும் கைது செய்யப்பட்டனர்.