குடியுரிமை சட்ட விவகாரம்; பாஜக கல்யாணராமன் மீது மேலும் வழக்கு!

வியாழன், 11 பிப்ரவரி 2021 (08:14 IST)
இஸ்லாமிய தூதர் முகமது நபியை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பாஜக கல்யாணராமன் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக மேட்டூரில் நடந்த கூட்டம் ஒன்றில் முகமது நபியை இழிவாக பேசிய வழக்கில் பாஜக கல்யாணராமன் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒரு வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின்போது மத விரோதத்தினை தூண்டும் வகையில் முகநூலில் பதிவிட்டதாக கோவை ரத்தினபுரி போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். தற்போது அந்த வழக்கின் பேரில் கல்யாணசுந்தரம் மீண்டும் கைது செய்யபட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்