சசிகலா புஷ்பா மீதும், அவரது கணவர், மகன் ஆகியோர் மீதும் வழக்குகள் பல பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது வீட்டில் வேலை செய்த பானுமதி, ஜான்சிராணி ஆகியோர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரும், அதனைத் தொடர்ந்து அவர்கள் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியும், தமிழகத்தில் தலைப்பு செய்தியானது.
எஸ்.பி.சண்முகநாதன், நீக்கப்பட்டதை தொடர்ந்து, சசிகலா புஷ்பாவிற்கு நெருக்கமான சிலரும் அதிமுகவிலிருந்து நீக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.