கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரயில் வழித்தடத்தை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க தயார்: ரயில்வே துறை

ஞாயிறு, 1 அக்டோபர் 2023 (11:17 IST)
சென்னை கடற்கரை மற்றும் வேளச்சேரி பறக்கும் ரயில் வழித்தடத்தை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க தயார் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 
 
சென்னை பறக்கும் ரயில் வழித்தடமான சென்னை கடற்கரை மற்றும் வேளச்சேரி வழித்தடத்தின் வணிக திட்ட அறிக்கையை தற்போது தமிழ்நாடு அரசு தயாரித்து வருகிறது.  
 
இந்த திட்ட அறிக்கையை தயாரித்து ஒப்படைத்தவுடன் தமிழ்நாடு அரசு எப்போது வேண்டும் என்று கேட்கிறதோ அப்போது கடற்கரை - வேளச்சேரி வழித்தடத்தை தமிழ்நாடு அரசிடம் முழுவதுமாக ஒப்படைக்கப்படும் என தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என் சிங் அறிவித்துள்ளார். 
 
எனவே கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரயில் வழித்தடம் விரைவில் தமிழ்நாடு அரசு கட்டுப்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்