சென்னை, தரமணியில், மதுபோதையில் கார் ஓட்டி ஐஸ்வர்யா ஏற்படுத்திய இந்த விபத்தில் முனுசாமி என்ற தொழிலாளி ஒருவர் இறந்தார். இந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றத்தில் 2-வது முறையாக ஜாமீன் கோரி ஆடி கார் ஜஸ்வர்யா மனுதாக்கல் செய்துள்ளார்.
ஏற்கனவே இது தொடர்பாக, ஐஸ்வர்யா ஜாமீன் மனு ஒன்றை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். ஆனால், அவரது ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.