குண்டர் சட்டத்தில் அட்டாக் பாண்டி கைது

வியாழன், 19 நவம்பர் 2015 (04:50 IST)
மதுரையில் வலம் வந்த பிரபல ரவுடி அட்டாக் பாண்டி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். 
 

 
மதுரை மற்றும் அதந் சுற்றுப்புற பகுதிகளில் கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் போன்ற 20-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடையவன் அட்டாக் பாண்டி. மேலும், கடந்த 2013ஆம் ஆண்டு, திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் ஆதரவாளரும், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினருமான பொட்டு சுரேஷ் கொலை செய்யப்பட்டார்.
 
இந்த வழக்கில் அட்டாக் பாண்டி போலஸீசாரால் தேடிப்பட்டு வந்தார். ஆனால் இரண்டு வரடுங்களுக்கு மேல் போலீசாருக்கு தண்ணி காட்டிய அட்டாக் பாண்டியை மும்பையில் போலீசார் கைது செய்தனர். பின்பு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
 
இந்த நிலையில், அட்டாக் பாண்டியை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்ய, மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ் குமார்யாதவ் உத்தரவிட்டார்.  

வெப்துனியாவைப் படிக்கவும்