மதுரை மற்றும் அதந் சுற்றுப்புற பகுதிகளில் கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் போன்ற 20-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடையவன் அட்டாக் பாண்டி. மேலும், கடந்த 2013ஆம் ஆண்டு, திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் ஆதரவாளரும், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினருமான பொட்டு சுரேஷ் கொலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில், அட்டாக் பாண்டியை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்ய, மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ் குமார்யாதவ் உத்தரவிட்டார்.