தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கோபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மாணிக்கம் மகன்கள் சாமிக்கண்ணு (35), குமார் (29). சாமிக்கண்ணு மற்றும் அவரது தம்பி குமார் இடையே நிலத்தகராறு இருந்ததாம். இந்த நிலையில், நிலத்தகராறில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக 8.11.2014-ல், சாமிக்கண்ணுவின் மனைவி கோவிந்தம்மாள் (32) என்பவர் மீது, அவரது கொழுந்தனார் குமார் கொடுவளால் தாக்குதல் நடத்தினராம். இதில், கோவிந்தமாளுக்கு தலை, கை, கால்கள் உள்ளிட்டப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து அ.பள்ளிப்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.