ஜெயலலிதா மர்ம மரணம்: ஆறுமுகச்சாமி கமிஷனின் விசாரணை முடிந்தது!

செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (14:17 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து விசாரணை செய்ய கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆறுமுகசாமி கமிஷன் தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்டது
 
இந்த கமிஷன் கடந்த சில ஆண்டுகளாக விசாரித்து வந்தது என்பதும் சசிகலா, ஓபிஎஸ் உள்பட பலரிடம் விசாரணை செய்யப்பட்டது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் ஜெயலலிதா மர்ம மரணம் மரணம் குறித்த விசாரணை முழுமையாக முடிவடைந்து விட்டதாகவும் இது குறித்து அறிக்கை தயார் செய்யும் பணி தொடங்கி விட்டதாகவும் தகவல் வெளியானது 
 
ஜூன் 24ம் தேதிக்குள் தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் அமைத்து தகவல் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் என்ன இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்