மேலும் பல வரலாற்று உண்மைகள் வெளிவரலாம்! – தமிழகத்தில் 7 இடங்களில் அகழ்வாராய்ச்சி அனுமதி!

புதன், 13 ஜனவரி 2021 (12:39 IST)
தமிழகத்தில் கீழடியில் மேற்கொண்ட அகழ்வாய்வின் வழியாக பல வரலாற்று சான்றுகள் கிடைத்த நிலையில் மேலும் 7 இடங்களில் அகழ்வாய்வு நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் கீழடியில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் தமிழர்களின் பண்டைய கால வாழ்க்கை, பண்பாடு குறித்த பல்வேறு சான்றுகள் கிடைத்துள்ளன. அதை தொடர்ந்து ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட மேலும் பல பகுதிகளில் அகழ்வாராய்ச்சி நடத்த வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் தமிழகத்தின் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொடுமணல், கொற்கை, கங்கை கொண்ட சோழபுரம், மயிலாடும்பாறை உள்ளிட்ட 7 பகுதிகளில் இந்த ஆண்டில் அகழ்வாராய்ச்சி நடத்த தொல்லியல் துறை அனுமதித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்