சமீபத்தில், சகிப்புத்தன்மை குறித்து நடிகர் அமீர்கான் தெரிவித்த கருத்திற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அவரது வீட்டின் முன்பு போராட்டங்களும் நடைபெற்றது. டெல்லியில், அமீர்கானுக்கு எதிராக போலீஸில் புகாரும் கொடுக்கப்பட்டது.
கோவாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ரகுமான், அந்த சம்பவத்தை குறிப்பிட்டார். மேலும் அவர் பேசும் போது “நாம் எதையும் அழகாக கையாளவேண்டும். மற்ற நாடு மக்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டும். ஏனெனில், நாம் மகாத்மா காந்தி வாழ்ந்த மண்ணில் இருந்து வருகிறோம் ” என்று கூறினார்.