மீனவர்களுக்கு என தனி கூட்டுறவு வங்கி: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவிப்பு!

புதன், 13 ஏப்ரல் 2022 (17:48 IST)
பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கூட்டுறவு வங்கி இருக்கும் நிலையில் மீனவர்கள் பயன் தரும் வகையில் மீனவர்களுக்கு என தனி கூட்டுறவு வங்கி விரைவில் தொடங்கப்படும் என மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார் 
 
மேலும் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க 242 நடமாடும் கால்நடை மருத்துவமனைகள் அமைக்கப்படும் என்றும் நாட்டுக்கோழி வளர்ப்பை ஊக்குவிக்க முதல்வர் வலியுறுத்தி உள்ளார் என்றும் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் 
 
நெல்லையில் ரூபாய் 5 கோடி மதிப்பில் வண்ண மீன் காட்சியகம் அமைக்கப்படும் என்றும் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று சட்டசபையில் தெரிவித்துள்ளார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்