சென்னைக்கு என கூடுதலாக 10 ஏரிகளை உருவாக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் பேட்டி

திங்கள், 30 மே 2022 (22:19 IST)
சென்னைக்கு என கூடுதலாக 10 ஏரிகளை உருவாக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி பேட்டி அளித்துள்ளார் 
 
இன்று தமிழகம் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களை மரியாதை நிமித்தமாக பாமக தலைவர் சந்தித்தார்.
 
 இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி சென்னைக்கு என கூடுதலாக 10 ஏரிகளை உருவாக்க வேண்டும் என்றும் அப்படி உருவாக்கினால் மட்டுமே காலநிலை மாற்றத்தை சமாளிக்க முடியும் என்று கூறினார் 
 
ஏற்கனவே சென்னையில் உள்ள ஏரிகள் கல்லூரிகள் மற்றும் அடுக்குமாடி கட்டடங்கள் என ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினாலே போதும் என நெட்டிசன்கள் பதில் கூறி வருகின்றனர்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்