இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ”உள்ளாட்சித் தேர்தலில், விடுதலை சிறுத்தைகள் கட்சி மக்கள் நலக்கூட்டணி கட்சிகளோடு இணைந்தே தேர்தலை சந்திக்கிறது. அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக தொகுதிபங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - திமுக கூட்டணி என்றும், தஞ்சாவூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி- திமுக கூட்டணி என்றும் தற்போது கடலூர் மாவட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் - திமுக கூட்டணி என்றும்செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.