2021 தேர்தலில் யாருடன் கூட்டணி – பிரேமலதா விஜயகாந்த் பேச்சால் பரபரப்பு !

திங்கள், 3 பிப்ரவரி 2020 (17:44 IST)
2021 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

பிரேமலதா விஜயகாந்த்


சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தல் வெற்றி வேட்பாளர்களின் பாராட்டு விழாக் கூட்டத்தில் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ‘தேமுதிக மட்டுமே கூட்டணி தர்மத்தை கடைபிடிக்கும் ஒரே கட்சி ‘ எனக் கூற அதன் பிறகு அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதற்கு எதிர்வினை ஆற்றினார்.

இதனால் கூட்டணிக் கட்சிகளுக்குள் விரிசல் விழுந்து உள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில் பிரேமலதா அதற்குள் மற்றொரு திரியைக் கொளுத்தி போட்டுள்ளார். இன்று சென்னையில் நிரூபர்களை சந்தித்த அவர் ‘கூட்டணி என்று சொல்லிவிட்டு கூட்டணி தர்மத்தை பின்பற்றவில்லை என்றால் மாற்று அணி என்பது போல ஆகிவிடும். இப்போது கூட்டணி நன்றாக சென்று கொண்டிருக்கிறது. ஆனால் 2021 ஆம் சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை அந்த நேரத்தில் அறிவிப்போம்’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்