தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு… அனைத்து வழக்குகளும் சென்னை நீதிமன்றத்துக்கு மாற்றம்!

வியாழன், 8 ஜூலை 2021 (15:43 IST)
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மாபெரும் போராட்டம் நடந்த நிலையில் அந்த போராட்டத்தின் போது போலிஸ் நடத்திய துப்பாக்கி சூட்ட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மாபெரும் போராட்டம் நடந்த நிலையில் அந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது. அந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட துப்பாக்கி சூட்டுக்கு 13 பேர் பரிதாபமாக பலியாகினர். இது சம்மந்தமாக மனித உரிமை ஆணையம், வழக்கை விசாரணைக்கு எடுத்தது. ஆனால் அப்போதைய தமிழக அரசு அளித்த அறிக்கைக்குப் பின்னர் வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

இந்நிலையில் இப்போது இது சம்மந்தமான மதுரைக் கிளையில் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு இருந்த நிலையில் அந்த வழக்குகள் எல்லாம் இப்போது சென்னை நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்