அப்போதைய தேர்தல் அலுவலர் காளிமுத்து அங்கு நடந்த நிகழ்வுகளை வீடியோ படம் எடுக்க ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். இதில் ஏற்பட்ட பிரச்னையில் அழகிரி, முன்னாள் துணை மேயர் மன்னன், ஒன்றிய செயலாளர் ரகுபதி, நிர்வாகி வெள்ளையன் உட்பட 21 பேர் தன்னை தாக்கியதாக கீழவளவு காவல் நிலையத்தில் காளிமுத்து புகார் செய்தார்.
அழகிரி, மன்னன் உட்பட 16 பேர் ஆஜராகவில்லை. அழகிரி சார்பில் வழக்கறிஞர் மோகன்குமாரும், மற்ற 18 பேருக்காக வழக்கறிஞர் எழிலரசனும் ஆஜராயினர். இதனால், இவ்வழக்கின் விசாரணையை ஜூன் மாதம் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி செல்வக்குமார் உத்தரவிட்டார்.