அதிமுக 234 தொகுதிகளிலும் டெபாசிட் கூட வாங்காது - குஷ்பூ ஆருடம்

வியாழன், 5 மே 2016 (18:06 IST)
வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றிபெற வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளர் குஷ்பூ கூறியுள்ளார்.
 

 
இது குறித்து நெல்லை மாவட்டம் தென்காசியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று, தென்காசி தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பழனி நாடாரை ஆதரித்து பேசினார்.
 
அப்போது பேசிய அவர், “தேர்தல் பிரச்சாரத்தை நான் தொடங்கியபோது திமுக கூட்டணிக்கு 160 இடங்கள் கிடைக்கும் என நினைத்தேன். தற்போது மக்கள் கூடுவதை பார்க்கும்போது, இந்த கூட்டணி 234 தொகுதிகளிலும் அமோக வெற்றிபெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
 
அதிமுகவிற்கு ஒரு தொகுதியில்கூட டெபாசிட் கிடைக்காது. ஜெயலலிதா பொய்யான வாக்குறுதிகளை கூறி, பொய் பிரச்சாரம் செய்து வருகிறார். நான் எப்போதும் பொய்யான வாக்குறுதி அளிக்க மாட்டேன்.
 
தென்காசி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் வெற்றி பெற்றால், தென்காசியில் ஆறு மாதத்தில் கல்லூரி தொடங்கப்படும்” என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்