2 ஆண்டுகளுக்கு பின் இன்று திருவண்ணாமலையில் கிரிவலம்: பக்தர்கள் குவிந்தனர்

வியாழன், 17 மார்ச் 2022 (19:08 IST)
இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் இன்று திருவண்ணாமலையில் கிரிவலம் நடந்து வருவதை அடுத்து பக்தர்கள் அங்கு குவிந்துள்ளனர்.
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கிரிவலத்திற்கு அனுமதி வழங்கப்படாத நிலையில் இன்று பக்தர்களுக்கு கிரிவலம் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை 
 
இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளதை அடுத்து இந்த மாதம் கிரி வலத்திற்கு அனுமதிக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது
 
 இதனை அடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் இன்று பௌர்ணமி தினத்தில் திருவண்ணாமலையில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர் என்பதும், மேலும் பாதுகாப்புக்காக போலீசார் பலப்படுத்தப் பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்