ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை செருப்பு, துடைப்பத்துடன் வரவேற்ற அதிமுகவினர்

வியாழன், 27 ஆகஸ்ட் 2015 (11:42 IST)
முன்ஜாமீனில்  கையெழுத்திட  மதுரை வந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை அதிமுகவினர் செருப்பு, துடைப்பத்துடன் வரவேற்றனர்.
 
மதுரை தல்லாகுளத்தில் முன்ஜாமீனில் கையெழுத்திட வந்த இளங்கோவனுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர்  போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
இந்த போராட்டத்தில் அதிமுக வினர் செருப்பு துடைப்பத்துடன், இளங்கோவனுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அப்பொழுது காவல் துறையினர் அதிமுக தொண்டர்கள் மீது தடியடி நடத்தினர்.
 
இந்நிலையில், தல்லாகுளம் காவல்நிலையத்திற்க்கு  எதிரில் பல்வேறு மாவட்ட அதிமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர்.
 
முதலமைச்சர் ஜெயலலிதா போராட்டத்தை கைவிட வேண்டும் என்று தொண்டர்களுக்கு  அறிவுறுத்தி இருந்தபோதும், மீண்டும் இளங்கோவனுக்கு எதிராக அதிமுக வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில், இளங்கோவனுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்