கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதால் துரோகிகள் என ஜெயலலிதாவால் முத்திரை குத்தப்பட்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் டிடிவி.தினகரன். ஜெயலலிதா இறக்கும் வரை அவரை கட்சியில் சேர்க்கவே இல்லை. ஆனால் இன்று அவர் மன்னிப்பு கேட்டுக்கொண்டதால் அவரை கட்சியில் மீண்டும் சேர்த்துக்கொள்வதாக அறிவித்துள்ளார் தற்காலிக பொதுச்செயலாளர் சசிகலா.
மேலும் வர்தா புயல், குடிநீர் பிரச்சினை போன்றவற்றை சிறப்பாக கையாண்ட முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு பாராட்டு தெரிவித்துள்ளார் கருப்பசாமி பாண்டியன். பன்னீர்செல்வம் தரப்பிடம் இருந்து அழைப்பு வந்தால் அதுகுறித்து பரிசீலிப்பேன் என்றும், ஆதரவாளர்களுடன் கலந்துபேசி அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார் கருப்பசாமி பாண்டியன்.