இவர் இன்று காலை 10.30 மணிக்கு மண்ணிவாக்கம் அண்ணா நகர் பகுதியில் ஏரியை ஆழப்படுத்தும் பணிகளை பார்வையிட்டார். பின்னர் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். மண்ணிவாக்கம் கூட்டுரோடு பகுதியில் வந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் அவரை வழிமறித்தது. பின்னர் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் ரத்த வெள்ளத்தில் கவுன்சிலர் கிருஷ்ணராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார்.
கிருஷ்ணராஜ் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். அந்த தகராறில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையுண்ட கிருஷ்ணராஜுக்கு இந்துமதி என்ற மனைவியும், ஸ்வேதா, வைஷாலி ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.