விஜய்க்கு ஆதரவு அளித்ததால்தான் விஷால் அலுவலகத்தில் ரெய்டு- மயில்சாமி பேச்சு

செவ்வாய், 24 அக்டோபர் 2017 (12:05 IST)
மெர்சல் பட விவகாரத்தில் விஜயை விஷால் ஆதரித்த காரணத்தால்தான் ரெய்டு நடத்தப்பட்டுள்ளது என்று நடிகர் மயில்சாமி தெரிவித்துள்ளார்.




தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் மயில்சாமி கலந்துகொண்டார். அப்போது அவர் கூறியபோது, மெர்சல் விவகாரத்தில் விஜய்க்கு விஷால் ஆதரவு அளித்த ஒரே காரணத்திற்காகத்தான் விஷால் அலுவலகத்தில் ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. மேலும் விஷால் வீட்டுக்கு மட்டுமல்ல நடிகர்கள் ரஜினி, கமல்ஹாசன் வீட்டிலும் ரெய்டுக்கு போயிருக்க வேண்டும். இந்தியாவில் மிகப்பெரிய மாநிலமான தமிழகத்தை வஞ்சிக்கின்றனர். பிரதமர் மோடி உலகை சுற்றியதற்கு பதிலாக இந்தியாவை சுற்றி வந்திருந்தாலாவது சாலைகள் தரமாக இருந்திருக்கும் என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்