சசிகலாவை சந்தித்த நடிகர் அஜித் - பரபரக்கும் போயஸ் கார்டன்!

செவ்வாய், 27 டிசம்பர் 2016 (02:45 IST)
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் அஜித் சந்தித்து பேசினார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.


 

தமிழக முன்னாள் முதலமைச்சரும், அஇஅதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா கடந்த டிசம்பர் 6ஆம் தேதி திங்கட்கிழமை மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இதனால், கட்சியின் பொதுச்செயலாளர் யார் என்று அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு விவாதங்கள் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு டிசம்பர் 29-ம் தேதி காலை 9.30 மணிக்கு வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடக்கிறது. ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியும், 25 ஆண்டு காலமாக அரசியல் ஆலோசகருமாக இருந்துவந்த சசிகலாதான் பதவியேற்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

இதற்கிடையில், சசிகலாவை நேரில் சந்தித்தாக கூறப்படுகிறது. ஜெயலலிதா மறைவடைந்த போது வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருந்தார் அஜித் அப்போது நேரில் இறுதிச் சடங்கில் பங்கேற்க முடியாததால், இரங்கல் மட்டும் தெரிவித்து இருந்தார்.

பின்னர், சென்னை வந்ததும் ஜெயலலிதாவின் சமாதிக்கு, தனது மனைவி ஷாலினியுடன் சென்று அஞ்சலி செலுத்தினார். இதனால், போயஸ் கார்டன் சென்று அஜித், அங்கு ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை சந்தித்து ஆறுதல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஆனாலும், ஏற்கனவே அதிமுகவில் அஜித் இணைகிறார் என்று தகவல்கள் வெளியாகின. இதுபோன்ற வதந்திகளுக்கு முடிவுகட்டும் நோக்கில் ரசிகர் மன்றத்தையே களைத்தார்.

பின்னர், ஜெ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோதும் இதுபோன்ற வதந்திகள் கிளம்பின. அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு நடத்தப்பட இருக்கும் நிலையில் இந்த சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்