2030ஆம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம்: முதல்வர் ஸ்டாலின்

வெள்ளி, 24 ஜூன் 2022 (11:46 IST)
2030ஆம் ஆண்டுக்குள் தமிழகம் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்ட வேண்டும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
திருப்பூர் விழுப்புரம் மாவட்டங்களில் ரூபாய் 700 கோடியில் அமைந்துள்ள டைடல் பூங்காவுக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார் 
 
இந்த விழாவில் அவர் பேசியபோது உற்பத்தியில் தெற்காசியாவில் தமிழகம் மிகச் சிறந்த அளவில் விளங்குகிறது என்றும் தொழில்துறை மிகச் சிறப்பாகவே தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்
 
மேலும் 2030ஆம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்ட வேண்டும் என்பதை தமிழகத்தின் இலக்காக உள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்