கடந்த வெள்ளிக்கிழமை காலை, சென்னை நுங்கம்பாக்கம் ரயில்வே நிலையத்தில் மர்ம நபர் ஒருவரால், அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் ரயில் நிலையத்தில் நடந்ததால், முதலில் ரயில்வே போலீசார் இந்த வழக்கை விசாரித்து வந்தனர். திருச்சி ரயில்வே எஸ்.பி. ஆனி விஜயா, கடந்த மூன்று நாட்களாக தீவிர விசாரணை செய்தார் சுவாதியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடமும் அவர் விசாரணை நடத்தினார்.