ஓடும் ரயிலில் காலை தேய்த்துக் கொண்டு செனற மாணவி...பதைபதைக்க வைக்கும் வீடியோ

வியாழன், 18 ஆகஸ்ட் 2022 (21:29 IST)
திருவள்ளூர் கவரப் பேட்டையில் பள்ளி மாணவி ஒருவர் ஓடும் ரயியில் காலை தேய்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

சென்னையில் மயிலாப்பூரில் இருந்து ஆவடி நோக்கி சென்ற மின்சார ரயிலில் செல்லும்போது, ஒரு மாணவி ஓடும் ரயிலில் காலை நடைமேடையில் வைத்துத் தேய்த்தபடி மிகவும் ஆபத்தான முறையில் பயணம் செய்தார்.

இதை அருகில் இருந்த மற்றவர்கள் வீடியோ எடுத்துள்ளனர்.  ஓடும் ரயிலில் படியிலேயே பயணிக்ககூடாது என ரயில்வேதுறையினர் மற்றும் போலீஸார் எச்சரித்து வருகின்ற்னர்.

இந்த நிலையில், ஆபத்தான முறையில் ரயிலில் பயணித்த  மாணவியின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்