தூக்கத்தில் உருண்ட நபர் பரிதாப மரணம்

செவ்வாய், 14 ஜூன் 2016 (07:42 IST)
காஞ்சிபுரம் அருகே மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்தவர் தூக்கத்தில் உருண்டு கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.


 

 
காஞ்சிபுரம் அருகே புத்தளி பகுதியில் ஜெயவேல்(57) என்பவர் அவரது வீட்டின் மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவர் தூக்க கலக்கத்தில் மொட்டை மாடியில் இருந்து கீழே உருண்டு விழுந்தார். 
 
விழுந்ததில் படுகாயம் அடைந்த ஜெயவேலை அந்த பகுதி மக்கள் மாருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு சென்றனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலே பரிதாபமாக உயிரிழந்தார்.  
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்