பசுமைக் குடி தன்னார்வ இயக்கம் சார்பில் மாபெரும் இலவச கண் சிகிச்சை சிறப்பு முகாம்

திங்கள், 6 மார்ச் 2023 (23:12 IST)
கடவூர் வட்டம் வரவனை கிராமம்.  நேற்று முன்தினம் காலை 9 மணி அளவில் பசுமைக் குடி தன்னார்வ இயக்கமும் வரவனை ஊராட்சி மன்றமும் மற்றும் திருச்சி ஜோசப் கண் மருத்துவமனையும் இணைந்து மாபெரும் இலவச கண் சிகிச்சை சிறப்பு முகாம் வரவனை சமுதாய கூடத்தில் நடைபெற்றது.
 
முகாமில் வரவணை ஊராட்சி மன்ற தலைவர் திரு மு. கந்தசாமி அவர்கள், மற்றும் பசுமைக்குடி தன்னார்வ இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு நரேந்திரன் கந்தசாமி தொழில்நுட்ப ஆலோசகர் அவர்களின் ஆலோசனைப்படி சிறப்பான முறையில் பொதுமக்களுக்கு  இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
 
பசுமைக்குடி தன்னார்வ இயக்கத்தின் தன்னார்வலர்கள் கவிநேசன், காளிமுத்து செந்தமிழ் செல்வன், சி. கருப்பையா மற்றும் ஆ.கலா தலைமை ஆசிரியர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
முகாமில் 70க்கும் மேற்படோர் கலந்து கொண்டனர் 30க்கும் மேற்பட்டோருக்கு இலவச கண் கண்ணாடி வழங்கப்பட்டது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்