ஆட்டோ புக் செய்ய புதிய செயலி: தமிழக அரசு அறிவிப்பு

வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (21:21 IST)
கேரளாவில் ஆட்டோ புக் செய்ய கேரள அரசு செயலி ஏற்பாடு செய்திருப்பதை போல் தமிழக அரசும் தமிழகத்தில் ஆட்டோ புக் செய்ய செயலி ஏற்பாடு செய்யவுள்ளது
 
கேரளாவைப் போல் தமிழகத்தில் ஆட்டோ முன்பதிவு செய்ய செயலி உருவாக்குவதற்கான முதல் கட்ட பணிகள் தொடங்கி இருப்பதாக தமிழக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது 
 
தமிழக அரசின் செயலி உருவாக்குவதற்கு முதல்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் ஆட்டோ கட்டணம் விரைவில் திருத்தி அமைக்கப்பட்டு நடைமுறைக்கு வரும் என்று போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் 
 
கேரளாவைப் போலவே விரைவில் தமிழகத்திலும் ஆட்டோ முன்பதிவு செய்ய செயலி வரவுள்ளது என்ற அறிவிப்புக்கு மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்