விடுதியில் மாணவிகள் திடீரென மயங்கி விழுந்ததை அடுத்து, இதுகுறித்து விடுதி காப்பாளருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர், மயங்கி விழுந்த மாணவிகளை உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
7 மாணவிகள் மொத்தமாக விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாணவிகளின் தற்கொலை முயற்சி குறித்து, ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் விசாரணை நடத்தி வருகின்றனர்.