இலங்கை கடற்படையினரால் கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி சிறைபிடிக்கப்பட்ட நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவர்கள் 29 பேரை இலங்கை போலீஸார் இன்று திரிகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தமிழக மீனவர்கள் மீது குற்றம் நிரூபிக்க படவில்லை என்பதால் அவர்களை விடுவிக்குமாறு நீதிபதி சரவணராஜா உத்தரவிட்டார். பின்னர், யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகளிடம் மீனவர்களை ஒப்படைக்கப்பட்டனர்.