மாற்றுத்திறனாளி திருமணத்திற்கு 4 கிராம் தங்கம்.. அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு..!

புதன், 19 ஏப்ரல் 2023 (18:11 IST)
அறநிலைத்துறைக்குச் சொந்தமான கோவில்களில் மாற்றுத்திறனாளிகள் திருமணம் செய்தால் அவர்களுக்கு நான்கு கிராம் தங்கம் வழங்கப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
 
அறநிலைத்துறைக்கு சொந்தமான திருக்கோயிலில் நடைபெறும் திருமணங்களில் மணமக்களில் யாராவது ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருந்தால் அவர்களுக்கு நான்கு கிராம் தங்கம் திருக்கோயில் சார்பாக வழங்கப்படும் என இந்து சமநிலை துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
 
அவருடைய இந்த அறிவிப்புக்கு மிகப்பெரிய வரவேற்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே அறநிலைத்துறையின் சார்பில் பல அதிரடி அறிவிப்புகள் வெளியாகி உள்ள நிலையில் இந்த அறிவிப்புக்கு பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்