தமிழகத்தில் இடியுடன் மழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சனி, 3 ஜூலை 2021 (17:56 IST)
தமிழகத்தில் மேலும் 3  நாட்களுக்கு இடியுடன் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வளிமண்டல அதிகமாக உள்ளதால் 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளாது.

தமிழகத்தில்   சில நாட்களாக வெயிக்கொளுத்தி வருவதால் வெப்பச்சலனம் நிலவி மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மழை அருகேயுள்ள பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.  எனவே காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, ரணிப்பேட்டை உள்ளிட்ட 16  மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யு எனக் கூறியுள்ளது.

அதேபோல் அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் எனவும், சென்னை தேனி,மதுரை , திண்டுக்கல், சேலம் தருமபுரி உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும்  எனவே மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்