3 பேரின் உயிரையும் ஜெயலலிதா காப்பாற்றுவார்: பேரறிவாளன் தந்தை நம்பிக்கை

சனி, 27 ஆகஸ்ட் 2011 (18:44 IST)
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 பேரது உயிர்களையும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா காப்பாற்றுவார் என்று பேரறிவாளன் தந்தை நம்பிக்கை குயில்தாசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது குறித்து குயில்தாசன் கண்ணீர் மல்க செய்தியாளர்களிடம் கூறியதாவது:

எனது மகன் உள்பட 3 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றும் நாள் அறிவித்துள்ள தகவலை கேட்டு மிகவும் வேதனையுடன் உள்ளேன்.அனைத்து கட்சி தலைவர்களும், மனித நேயம் உள்ளவர்களும், தமிழ் இன உணர்வு உள்ளவர்களும், மாணவர்களும், இளைஞர்களும் அனைவரும் ஒன்று திரண்டு ஆலோசனை செய்து கொண்டிருக்கின்றனர்.

விரைவில் ஆலோசனையில் நல்ல முடிவு எடுத்து முதலமைச்சர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி மனு அளிக்க உள்ளனர். எனக்கு தமிழக முதலமைச்சர் மீது நம்பிக்கை உள்ளது.3 பேர் உயிர்களை அவர் நிச்சயம் காப்பாற்றுவார் என நான் நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்