2025 பொங்கல் பண்டிகை - இலவச வேட்டி, சேலை.! ரூ.100 கோடி ஒதுக்கீடு..!

Senthil Velan

வியாழன், 29 ஆகஸ்ட் 2024 (14:54 IST)
வரும் 2025-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி, சேலை திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
 
இதுகுறித்த வெளியிடப்பட்ட அரசாணையில், 2025 பொங்கல் பண்டிகைக்கு 1,77,64,476 சேலைகளும், 1,77,22,995 வேட்டிகளையும் உற்பத்தி செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தினை 2025 பொங்கல் பண்டிகைக்கு தொடர்ந்து செயல்படுத்திடவும், குறிப்பிட்ட கால கெடுவிற்குள் உற்பத்தி செய்து வழங்கிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
 
அதோடு 2024 பொங்கல் பண்டிகைக்காக பயனாளிகளுக்கு விநியோகம் செய்ய அனுப்பி வைக்கப்பட்டு இருப்பில் உள்ள வேட்டி, சேலைகளை நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு அனுப்பி வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வேட்டி, சேலைகள் பயனாளிகளுக்கு கிடைப்பதை உறுதி செய்ய விரல் ரேகைப் பதிவை கட்டாயமாக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


ALSO READ: இந்திய பணக்காரர்கள் பட்டியல்.! அம்பானிக்கு அதானி கொடுத்த ஷாக்.!!
 
பொதுமக்களுக்கு வேட்டி, சேலை வழங்கும் நடைமுறையை கண்காணிக்க வருவாய்த்துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்