ஆள் வேணாம், ஆதாரத்த கொடுங்க: கோடநாடு விவகாரத்தில் பல்ப் வாங்கிய எடப்பாடியார்!!

செவ்வாய், 15 ஜனவரி 2019 (09:11 IST)
கோடநாடு விவகாரத்தில் போதிய ஆதாரம் இல்லாததால் கைது செய்யப்பட்ட மனோஜ், சயோன் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.
 
கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பு இருப்பதாக மேத்யூஸ் என்ற பத்திரிகையாளர் வெளியிட்ட வீடியோ தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த வீடியோ ஒரு திட்டமிட்ட சதி என்றும், இந்த வீடியோ வெளியிட்டவர் மற்றும் அதன் பின்னணியில் உள்ளவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார்
இந்த வீடியோவில் தொடர்புடைய சயன், மனோஜ் ஆகிய இருவரையும் தமிழகத்தில் இருந்து டெல்லி சென்ற தனிப்படை போலீசார் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து எழும்பூர் குற்றவியை நீதிமன்றத்தில் நீதிபதி சரிதா முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
 
இவ்வழக்கை விசாரித்த நீதிபது சரிதா, போதிய ஆதாரம் இல்லாததால் அவர்களை காவலில் அனுப்ப முடியாது என கூறி அவர்களை விடுவித்தார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்